Articles




அறிமுகம்





சகல புகழும் அல்லாஹ்வுக்கே உரியன. நாங்கள் அவனை புகழ்ந்து, அவனிடமே உதவி கோரி, எமது ஆத்மாக்களின் தீங்கு களையும், எமது செயல்களின் தவறுகளையும் விட்டும் பாதுகாவல் தேடுகிறோம். அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடினானோ அவரை பிழையான வழியில் அழைத்துச் செல்ல எவராலும் முடியாது. அல்லாஹ் எவரை பிழையான வழியில் விட்டு விட்டானோ அவருக்கு நேர்வழி காட்ட எவராலும் முடியாது.





வணக்கத்துக்குரிய இறைவன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை என்று சாட்சி கூறுகிறேன். அவனுக்கு இணையாக யாருமில்லை. முஹம்மத் நபி (ஸல்லல் லாஹு அலைகிவ ஸல்லம்) அவர்கள் அல்லாஹ்வின் திருத் தூதர் என்றும் அடியான் என்றும் சாட்சி கூறுகிறேன்.





இக்கட்டுரையில் இஸ்லாத்தைப் பற்றி பொதுவாக எழும் 40 கேள்விகளும் பல்வேறு மார்க்க அறிஞர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட அவற்றுக் குரிய பதில்களையும் சேர்த்துள்ளேன்.





இக் கட்டுரை மூலம் இஸ்லாத்தை சரிவர அறிந்துக் கொள்ளவும், அல்லாஹ், முஸ்லிம்கள், முஹம்மத் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், யேசு நாதர் (அலைஹிஸ் ஸலாம்), ஜிஹாத், பலதார திருமணம், பெண்கள் போன்ற விஷயங்கள் சம்பந்தமாக இஸ்லாத்தின் கொள்கை என்ன? என்று உங்கள் சிந்தனையில் எழும் கேள்விகளுக்கு விளக்கம் கிடைக்க முடியும்.





யாருக்கெல்லாம் அல்லாஹ் நேர்வழி காட்டி அருள் புரிந்தானோ அவர்கள் வழியில் எம்மையும் அழைத்துச் செல்வானாக.





1. இஸ்லாம் என்றால் என்ன?





இஸ்லாம் என்ற வார்த்தை சாந்தி, சமாதானம், நிம்மதி மற்றும் கீழ்படிதல் என்று பொருள் படும். சாந்தி என்றால், உங்களுக்குள், உங்கள் சுற்றாட லுடன் சாந்தியுடனும், சமாதானத்துடனும் வாழ்வதா கும். கீழ்படிதல் என்பது, இறைவனின் கட்டளைக்கு கீழ்படிதல் ஆகும். இதனை சுருங்கக் கூறுவதாயின் இறைவனின் கட்டளைக்கு கீழ் படிந்து சாந்தியுடன் வாழ்வது என்று பொருள் படும்.





இதன் பெயர் குறிப்பிடுவது போன்று, நீதியான மனோபாவத் தையும், அதனடிப்படையிலான ஒரு வாழ்க்கை முறையையும் குறிப்பிடும் இது ஒரு அபூர்வமான மதமாகும். யூதர்கள் இனத்திலிருந்து யூத மதம் அதன் பெயரை பெற்றது. யேசு கிறிஸ்துவின் பெயரில் கிறிஸ்தவ மதம் அழைக்கப் பட்டது. கௌதம புத்தரின் பெயரில் புத்த மதமும், இந்து நதி தீரத்தில் தோன்றியதால் இந்து மதமும் அப் பெயர்களை கொண்டு அழைக்கப் பட்டன. ஆனால், இஸ்லாம் என்ற தூதுவத்திலிருந்து முஸ்லிம்கள் என்ற பெயரை மக்கள் பெற்றனர். ஆனால் முஹம்மதின் மதத்தவர்கள் என்று முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) என்பவரின் போதனைகளை பின்பற்றும் மக்களை அழைக்க முடியாது.





2. அல்லாஹ் என்றால் யார்? நபி என்பவர் யார்?





அரபு மொழியில் அல்லாஹ் என்ற வார்த்தை 'ஒரு இறைவன்" என்பதை குறிக்கும். அல்லாஹ் என்றால் முஸ்லிம்களின் இறைவன் என்று பொருள் படாது. அவனே சகலவற்றையும் படைத்து அவற்றை பரிபாலனம் செய்யும் காரணத்தால் படைக் கப் பட்ட அனைத்துக்கும் அவனே இறைவனாவான்.





அகிலங்களையும் அவற்றில் உள்ள சகலவற்றையும் படைத்த இறைவன், மனிதர்களை தமக்கு வேண்டியவாறு வாழும் படி கை விடவில்லை. மாறாக, மனித இனத்திலிருந்தே நற்பண்புகள் உள்ள மனிதர்களை காலத்துக்குக் காலம், எல்லா சமூகத் திலும் உருவாக்கினான். நபிமார்கள் என அழைக்கப் பட்ட அந்த உத்தமர்கள் தமது சமூகத்துக்கு நேர் வழி காட்டினார்கள். “இறைவன் ஒருவன். அவனை மாத்திரம் வழிபடுங்கள். உலகில் சமாதானமாக வாழுங்கள்." என்று போதித்தார்கள். அவர்கள் காட்டிய வழிகள் மதங்களாகின. அவர்க ளின் போதனைகள் மதப் புத்தகங்களாயின. அந்த வழியில் வந்த இப்ராஹிம், தாவூத், மூஸா, ஈஸா போன்ற நபிமார்கள் அனைவரும் உத்தமர்களே. அவர்களுல் முஹம்மத் நபி இறுதியாக வந்தார்கள்.





3. அல்லாஹ் எம்மை போன்ற தோற்றம் உள்ளவனா?





இல்லை. அல்லாஹ் சம்பூர்ணமானவன். அவனது படைப்புகளை போல் அவன் இல்லை. அல்லாஹ்வை பற்றி, அல்லாஹ் கூறியவைகளை தவிர மேலதிகமாக ஒரு முஸ்லிம் ஒரு போதும் கூறுவதில்லை. அல்லாஹ் சம்பூர்ணமானவன். மிகவும் அபூர்வமானவன்.





4. கஅபா என்றால் என்ன?





கஅபா என்பது வணக்கம் புரியும் இடமாகும். நான்காயிரம் வருடங்களுக்கு முன் நபிகளாகிய இப்ராஹிம், அவர் மகன் இஸ்மாயில் ஆகிய இருவருக்கும் அதனை கட்டும்படி இறைவன் ஆணையிட்டான். ஆதம் நபி முதன் முதலாக கட்டியதாக அனேகர் நம்பும் அத்திவாரத்தின் மீது கருங்கட்களை கொண்டு இக் கட்டிடம் மீண்டும் கட்டப் பட்டது. இந்த இடத்தை தரிசிக்க வருமாறு மக்களுக்கு அழைப்பு கொடுக்கும் படி இறைவன் இப்ராஹிம் நபிக்கு கட்டளையிட்டான். இப்ராஹிமின் அழைப்புக்கு பதிலளிக்கும் ஹாஜி எனும் யாத்திரீகர்கள் இன்றும் அங்கு யாத்திரை செய்யும் போது, “இறைவா! உன் சேவைக்காக (உள்ளோம்)" என்று கூறுவார்கள்.





5. முஸ்லிம் என்று அழைக்கப் படுபவர் யார்?





“முஸ்லிம்" என்ற வார்த்தையின் பொருள் இறைவனின் கட்ட ளைக்கு அடிபணியும் ஒருவன் என்பதாகும். “வணக்கத்துக்கு உரியவன் இல்லாஹ் வைத் தவிர வேறு யாருமில்லை. மேலும் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அல்லாஹ் வின் திருத் தூதராவார்" என்று உறுதி கூறுவதன் மூலம் இது நடைபெறுகிறது. பரந்த அடிப்படையில் நோக்கும் போது, அல்லாஹ்வின் கட்டளைக்கு சுய விருப்பத்துடன் அடிபணியும் எவரும் முஸ்லிமாவார். இதன்படி, முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு முன் வாழ்ந்த நபிகள் அனைவரும் முஸ்லிம்கள் என்று கருதப் படுவார்கள். மூஸா, யேசு (அலைஹிஸ் ஸலாம்) ஆகியோருக்கு நீண்ட காலத்துக்கு முன் வாழ்ந்த இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்) பற்றி “அவர் யூதரோ, கிறிஸ்தவரோ இல்லை. ஆனால் அவர் ஒரு முஸ்லிம் ஆவார்" என்று குர்ஆன் தெளிவாக குறிப்பிடுகிறது. காரணம், அவர் இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்தவராவார். இதன் படி அல்லாஹ்வின் கட்டளைக்கு ஒருபோதும் அடி பணியாது வாழும் முஸ்லிம்கள் இருப்பது போல், தம்மால் இயன்ற அளவு இஸ்லாமிய முறையில் வாழ முயற்சிக்கும் முஸ்லிம்களும் இருக்கி றார்கள். முஸ்லிமின் வாழ்க்கையோ, ஒழுக்கமோ எதுவும் இல்லாது, முஸ்லிம் பெயரில் நடமாடும் சிலரை மாத்திரம் பார்த்து இஸ்லாத்தை எடைபோட முடியாது. எந்த அளவுக்கு ஒருவர் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து நடக்கிறாரோ, அந்த அளவுக்கு அவர் முஸ்லிமாக இருப்பார்.





6. முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) என்பவர் யார்?





சுருக்கமாக கூறினால், முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அரேபிய நாட்டின், மக்கா என்ற நகரில் கிறிஸ்துவுக்குப் பின் 570ம் வருடம் உயர் கோத்திரத்தில் பிறந்தார். அன்னாரது வம்சம் நபி இப்ராஹிம் (அலைஹிஸ் ஸலாம்) அவர்க ளின் மைந்தனாகிய நபி இஸ்மாயில் (அலைஹிஸ் ஸலாம்) முதல் ஆரம்பமாகிறது. முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பிறப்பதற்கு முன்னரே அவரது தந்தை அப்துல்லாஹ் இறந்து விட்டார். அன்னார் பிறந்து ஆறு வயதில் தாயாரும் இறந்து போனார். அன்றைய சமூக வழக்கத்தின் படி ஆரம்பத்தில் செவிலித் தாயிடம் வளர்ந்த முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பின்னர் பாட்டனாலும், சித்தப்பாவினாலும் வளர்ந்த காரணத்தால், முறையாக பாடசாலை சென்று கல்வி பயில வில்லை. இளம் வயதிலேயே நேர்மை, ஒழுக்கம் போன்ற நற் பன்புகளுக்கு புகழ் பெற்ற அவர், மலைக் குகையில் தியாணம் புரியும் பழக்கத்தையும் கொண்டிருந்தார். அவரது 40 வயதில் ஜிப்ரீல் என்ற வானவர் அவர் முன் தோன்றிய போது, நபித்துவமும் கொடுக்கப் பெற்றார். அதன் பின் 23 வருடங்களுக் கும் மேலாக இறை வசனங் கள் அவருக்கு இறக்கப்பட்டன. அவை ஒன்று திரட்டப்பட்டு, குர்ஆன் என்று அழைக்கப் படும் அப்புத்தகத்தை இறைவனின் இறுதி வார்த்தையாக முஸ்லிம்கள் கருதுகின்றனர். எவ்வித மாற்றத்துக்கும் ஆளாகாமல், ஆரம்பத் தில் இறங்கிய அதே உருவில் இன்றும் பாதுகாக்கப் பட்டு வரும் குர்ஆன், தனக்கு முன் இறக்கப்பட்ட தௌராத், கீதம், பைபிள் ஆகிய பழைய வேதங்களில் உள்ள உண்மைகளை உறுதிப் படுத்துகின்றது.





7. முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நபியாகவும் இறைவனின் தூதராகவும் எவ்வாறு ஆனார்?





தனது 40வது வயதில் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மலை குகையில் தியானத்தில் இருக்கும் போது, முதலாவது இறை வசனத்தை ஜிப்ரீல் என்ற மலக்கின் மூலம் கொடுக்கப் பெற்றார். அதன் பின் 23 வருடங்களாக இறக்கப்பட்ட இறை வசனங்கள் குர்ஆன் என்று அழைக்கப் படுகிறது.





ஜிப்ரீல் (அலைஹிஸ் ஸலாம்) கூறிய வார்த்தைகளை மக்களுக்கு பாராயனம் செய்து இறைவன் அறிவித்த உண்மையை மக்களுக்கு போதனை செய்ய ஆரம்பித்தவுடன், அன்னாரும், அவரை பின்பற்றிய சிறிய கூட்டத்தினரும் கொடூரமான துன்பத்துக்கு ஆளாக்கப் பட்டனர். இப்படியான துன்பங்கள் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்த போது, 622 வருடம் தாம் வசித்த இடத்தை விட்டு நீங்கி தூரமான இடத்தில் சென்று குடியேறும் படி இறைவன் உத்தரவிட்டான். மக்காவை விட்டு வெளியேறி சுமார் 260 மைல்களுக்கப்பால் உள்ள மதினா நகருக்கு சென்ற இச்சம்பவம் ஹிஜ்ரா அல்லது இடம் பெயர்தல் என அழைக்கப்படுவதோடு, முஸ்லிம்களின் வருட ஆரம்பத்தை குறிப்பிடுகிறது.





பல வருடங்களின் பின்பு, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் அன்னாரை பின் பற்றியவர்களும் மீண்டும் மக்கா நகருக்கு வெற்றியுடன் திரும்பி வரும் வாய்ப்பு கிடைத்தது. அச் சந்தர்ப்பத்தில், தமது எதிரிகள் அனைவரையும் மன்னித்து மக்காவில் இஸ்லாத்தை உறுதியாக ஸ்தாபிக்க அவரால் முடிந்தது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தனது 63ம் வயதில் மரணமெய்திய போது அரேபிய நாட்டின் பெருமளவிலான பகுதிகள் முஸ்லிம்களாகியிருந்த னர். அன்னாரது மரணத்தின் பின் ஒரு நூற்றாண்டு காலத்துக்குள், மேற்கில் ஸ்பெயின் முதல், கிழக்கில் உள்ள சீனா வரை இஸ்லாம் பரவியது.





8. முஸ்லிம்கள் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை வணங்குகிறார்களா?





இல்லை. முஹம்மத் (சல்) அவர்களையோ அல்லது வேறு எந்த நபியையோ முஸ்லிம்கள் வணங்குவதில்லை. ஆதம், நூஹு, இப்ராஹிம், தாவூத், சுலைமான், மூஸா, ஈசா (அலைஹிமுஸ் ஸலாம்) உட்பட எல்லா நபிமார்கள் மீது முஸ்லிம்கள் விசுவாசம் கொண்டுள்ளார்கள். முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நபிமார்களில் இறுதியாக வந்தவர் என்று முஸ்லிம்கள் விசுவாசம் கொண்டுள்ளார்கள். வணங்குவதற்குத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே, வேறு எந்த மனிதனையும் வணங்கக் கூடாது என்பது முஸ்லிம்களின் நம்பிக்கையாகும்.





9. குர்ஆன் என்பது என்ன?





ஜிப்ரீல் (அலைஹிஸ் ஸலாம்) மூலம், முஹம்மது நபி (ஸல்லல்லா ஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு அருளப்பட்ட அல்லாஹ் வின் வார்த்தைகள் அடங்கிய பதிவேடு குர்ஆன் ஆகும். அதனை முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மனப்பாடம் செய்து தனது சகாபாக்களுக்கும் கற்றுக் கொடுத்து அவர்கள் மூலம் எழுதச் செய்தார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ் நாளிலேயே எழுத்தா ளர்கள் அதனை மீண்டும் சரி பிழை பார்த்தார்கள். கடந்த பல நூற்றாண்ட காலத்தில், 114 சூராக்களை கொண்ட குர்ஆனில் ஒரு வார்த்தையேனும் மாறவில்லை. இதன் காரணமாக 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு இறக்கி வைக்கப்பட்ட குர்ஆன் எல்லா வகையிலும் ஒப்பு இணையற்ற, அற்புதமான வசனங்களைக் கொண்டுள்ளது.





10.குர்ஆன் எதனைப் பற்றி கூறுகிறது?





இறுதியாக இறக்கி வைக்கப்பட்ட அல்லாஹ்வின் வார்த்தைக ளாகிய குர்ஆன் முஸ்லிம்களின் இறை விசுவாசத்துக்கும், வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமைந்துள்ளது. மனித இனத்துக்கு தேவையான எல்லா விஷயங்களைப் பற்றியும் குர்ஆன் குறிப்பிடுகிறது. புத்தி, கோட்பாடுகள், வணக்க வழிபாடுகள், சட்டங்கள் என்பன இதில் அடங்கயிருப்பினும், இதன் அடிப்படை கருப் பொருள் இறைவனுக்கும் அவனது படைக்களுக்கும் இடையில் உள்ள உறவேயாகும். அதே வேளையில் நேர்மையான சமூகத்துக்கும், மனிதனின் ஒழுக்க மான நடத்தைக்கும், நியாயமான பொருளாதார முறைக்கும் தேவையான வழிமுறைகளை குர்ஆன் காட்டுகிறது.





11.இதனை தவிர புனிதமான வேறு நூல்களும் உண்டா?





ஆம். அது சுன்னா எனப்படும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை முறைகளும், அறிவுறைகளும் முஸ்லிம்களுக்கு கொடுக்கப் பட்ட இரண்டாவது வழிகாட்டல் களாகும். ஹதீஸ் என்பது, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தமது வாழ் நாட்களில் கூறிய, செய்த, அனுமதி கொடுத்த நம்பகமான நபர்கள் மூலம் அறிவிக்கப் பட்ட விஷயங்களாகும். சுன்னாவின் மீது நம்பிக்கை வைப்பது இஸ்லாத்தின் அடிப்படை இறைவிசுவாசத்தில் ஒரு அங்கமாகும்.





நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் ஹதீஸ் களிலிருந்து சில உதாரணங்கள்.





· மற்றவர்கள் மீது கருணை காட்டாதவர் மீது அல்லாஹ் கருணை காட்ட மாட்டான்.





· தான் விரும்புவதை தன் சகோதரனுக்கும் (கிடை க்க வேண்டு மென) விரும்பும் வரை நீங்கள் உண்மையில் விசுவாசம் கொள்ளவில்லை.





· பலமுள்ளவன் என்பது அடுத்தவனை அடித்து வீழ்த்துபவன் அல்ல. அதிக கோபமான சந்தர்ப்பத்திலும் தன்னை அடக்கிக் கொள்பவன் தான் உண்மையிலயே பலமுள்ளவன். (புகாரி, முஸ்லிம், திர்மிதி, பயிஹகி ஆகியோர் அறிவித்தார்கள்.)





12.இஸ்லாம் தான் உண்மையான மதம் என நாம் அறிவது எப்படி?





· இறைவனாகிய அல்லாஹ் ஒருவன், இணையற்றவன், பரிபூர்ணமானவன் என்று உறுதி படுத்தும் ஒரே மதம் இஸ்லாம் மாத்திரமே.





· அல்லாஹ்வை மாத்திரம் வணங்க வேண்டும் என்று கூறும் ஒரே மதம் இதுவே. இதில் ஜேசு வுக்கோ, சிலைகளுக்கோ, வானவர்களுக்கோ வணங்குவதற்கு இடமில்லை.





· ஒன்றுக்கொன்று முறன்படும் வசனங்கள் குர்ஆனில் இல்லை.





· விஞ்ஞானம் சம்பந்தமான உண்மைகள் 1400 வருடங்களுக்கு முன்பிருந்தே குர்ஆனில் அடங்கியுள்ளன. இவ்வாறு 1400 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட விஞ்ஞானம் சம்பந்தமான உண்மைகளை இன்றும் விஞ்ஞானிகள் கண்டு பிடிக்கிறார்கள். குர்ஆன் கூறும் இவ்விபரங்கள் விஞ்ஞானத்துக்கு மாற்றமாக இல்லை.





· குர்ஆனை போன்று இன்னுமொரு நூலை கொண்டு வரும் படி உலகத்துக்கு அல்லாஹ் சவால் விடுகிறான். மனிதனால் அப்படி யொன்றை செய்யமுடியாது என்றும் அல்லாஹ் கூறுகிறான்.





· சரித்திரத்தில் பெரும் செல்வாக்கு படைத்த மனிதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களே. முஸ்லிம் அல்லாத ஒரு மனிதரால் எழுதப் பட்ட “சரித்திரத்தில் பெரும் செல்வாக்கு படைத்த 100 மனிதர்கள்." என்ற நூலில், முதல் ஸ்தானத்தை முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். ஜேசு நாதருக்கு கிடைத்தது மூன்றாவது ஸ்தானமே. இங்கு ஜேசு நாதரும் அல்லாஹ்வால் அனுப்பப் பட்ட ஒரு தூதரே என்பதை கவனத்தில்கொள்ளவேண்டும்.





13.இஸ்லாம் ஏனைய மதங்களை மதிக்கிறதா?





“மார்க்கத்துகாக உங்ளுடன் எதிர்த்து போராடா மலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அத்தகை யோருக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்கள் பால் நீங்கள் நீதமாக நடந்துக் கொள்வதையும் அல்லாஹ் உங்களுக்கு தடுக்கவில்லை. அல்லாஹ் நீதியுடன் நடந்துக் கொள்பவர்களை நேசிக்கிறான்." குர்ஆன் 60 - 8





“மார்க்கத்தில் எத்தகைய நிர்ப்பந்தமும் இல்லை." குர்ஆன் 2– 256





சிறுபான்மை இனத்துக்கு கொடுக்கப்பட்ட விஷேட சலுகை களை பாதுகாப்பது இஸ்லாத்தின் ஒரு கடமை என்பதால் இஸ்லாமிய நாடுகளில் முஸ்லிம் அல்லாத வணக்கத் தலங்கள் செழித்து வளர்ந்தன. மற்றைய மதங்களை இஸ்லாம் மதித்து அனுமதித்த சம்பவங்கள் பற்றி சரித்தரம் நிறைய சான்று பகர்கின்றது. உமர் (ரலி) 634 ம் வருடம் ஜெருசலம் நகருக்குள் வெற்றியுடன் பிரவேசித்த போது அங்குள்ள அனைவருக்கும் பொது மன்னிப்பு கொடுத்து அங்கு வாழ்ந்த அனைத்து சமூகத்தி னருக்கும் தங்கள் மதங்களை தொடர்ந்து வழிபடும் சுதந்திரத் தையும் கொடுத்தார். ஸ்பானிய தேசத்தை ஆட்சி செய்த முஸ்லிம் மன்னர்கள் நாட்டு மக்களுக்கு அவரவர் மதங்களை அனுஷ்டிக்கும் சுதந்திரத்தை கொடுத்த காரணத்தால் யூதர் சமூகத்தின் பொற்காலம் எனக் கருதப்படும் யுகம் முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியின் கீழ் வளர்ச்சியடைந்தது.





அது மாத்திரமன்றி, முஸ்லிம் அல்லாத சிறு பான்மையினர், தங்களது சமூக குடும்பச் சட்டத்தின் அடிப்படையில் தமக்கிடை யிலான வழக்குகளை நடத்தவும் அவர்களுக்கு இஸ்லாமிய சட்டம் இடமளித்தது.





14.இஸ்லாத்துக்கும் கிறிஸ்தவ மதத்துக்கும் வித்தியாசமான ஆரம்பங்கள் உள்ளனவா?





யூத மதத்துடன் சேர்ந்து, இவ்விரு மதங்களும் அவற்றின் மூலகர்த்தாவாகிய இப்ராஹிம் அலைஹிஸ் ஸலாம் அவர்களிடமிருந்து ஆரம்பமா கின்றன. இப்ராஹிமின் மூத்த மகன் இஸ்மாயி லின் சந்ததியில் முஹம்மத் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும், இரண்டாவது மைந்தன் இஸ்ஹாக் (அலைஹிஸ் ஸலாம்) வழியில் மூஸா (அலைஹிஸ் ஸலாம்), ஈஸா (அலைஹிஸ் ஸலாம்) ஆகிய இருவரும் தோன்றினார்கள். இன்று மக்கா என அழைக்கப்படும் நகரத்தில் இப்ராஹிம் (அலைஹிஸ் ஸலாம்) கஅபா என்றழைக்கப்படும் கட்டிடத்தை அமைத்தார். முஸ்லிம்கள் அல்லாஹ் வை தொழும் போது, அதன் பக்கம் முகம் திரும்புவார்கள்.





15.ஜேசு நாதர் (அலைஹிஸ் ஸலாம்) பற்றி முஸ்லிம்களின் கருத்து என்ன?





ஜேசு நாதர், அன்னாருடைய புனித அன்னை மர்யம் (அலைஹாஸ் ஸலாம்) ஆகியோரை பற்றி முஸ்லிம்கள் மிகவும் உயர்வாக கருதுகிறார்கள். தந்தை இல்லாமல், ஜேசு நாதர் மிகவும் அற்புதமாக பிறந்ததாக குர்ஆன் உறுதியாக கூறுகிறது. “நிச்சயமாக அல்லாஹ்விடம் ஈசாவுக்கு உதாரணம் ஆதமுடைய உதாரணத்தைப் போன்றதே. அவரை (மண்ணால்) படைத்து பின் 'ஆகுக' என்று கூறினான். அவர் ஆகிவிட்டார்." குர்ஆன் 3-59. நபியான அவருக்கு அனேக அற்புதங்கள் கொடுக்கப் பட்டன. அவற்றுள் தன் தாயின் புனித்தத்துவத்தைப் பற்றி பிறந்தவுடன் பேசிய அற்புதமும் அடங்கும். குருடர்களை, நோயாளிகளை சுகப்படுத்தியது, மரணித்தவரை உயிர் கொடுத்து எழுப்பியது, களி மண்ணால் பறவைகள் செய்து அவைகளை பறக்கக் செய்தது, எல்லாவற்றையும் விட அவர் கொண்டு வந்த செய்தி மிக முக்கியமானதாகும். அன்னார் இறை தூதர் என்பதை உறுதிப் படுத்துவதற்கு இவ்வற்புதங்களை அல்லாஹ் அன்னாருக்கு கொடுத்தான். அன்னார் சிலுவையில் அறையப் படவில்லை எனறு குர்ஆன் கூறுகிளது. (சூரா மர்யம்.)





16. அல்லாஹ்வை கண்களால் பார்க்கவோ, காதால் கேட்கவோ, தொடவோ, நுகரவோ, உருசிக்கவோ, கற்பனை செய்யவோ முடியாத போது அவனை விசுவாசம் கொள்வது எப்படி?





முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கற்றுக் கொடுத்த விஷங்களின்படி, அல்லாஹ்வை ஒருவரும் இவ்வுலக வாழ்வில் கண்ணால் கண்டதில்லை என்று எமக்குத் தெரியும். எமது அறிவைக் கொண்டு அல்லாஹ்வுடன் எந்த வகையிலும் தொடர்பு கொள்ளவும் முடியாது. ஆனால் எமது ஐம்புலன்கள், பகுத்தறிவு ஆகியவற்றை உபயோகித்து இந்த பிரபஞ்சம் சுயமாக உண்டாகியிருக்க முடியாது என்பதை புரிந்துக் கொள்ளுமாறு இஸ்லாம் எம்மை அழைக்கிறது. யாரேனும் ஒருவர் அனைத்துக்கும் உருவம் கொடுக்கவும், அதன் பின் அவைகளுக்கு அசைவுகள் கொடுக்கவும் வேண்டும். இதனை செய்வது எமது சக்திக்கு மீறிய ஒரு விஷயமாகும். எனினும் எம்மால் அந்த உண்மையை புரிந்துக் கொள்ள முடியும்.





ஓவியத்தின் அழகை காண அதனை வரைந்த ஓவியனை பார்க்க வேண்டுமா? அதே போன்று, ஓவியன் வரைவதை நாம் நேரில் காணாமலே ஓவியங்களை பார்க்க முடியும் போது, அண்ட சராசரங்களை படைத்த அல்லாஹ்வை கண்ணால் பார்க்காமல், (தொடாமல், காதால் கேட்காமல்) நம்பிக்கை கொள்ள முடியும்.(1)





17.இஸ்லாத்தின் தூண்கள் என்ன?





இஸ்லாத்தில் ஐந்து பிரதான தூண்கள் உள்ளன.





1. ஈமான் எனும் வணக்குத்துக்குரியவன் ஓரு இறைவன் என்றும் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அந்த இறைவனின் தூதர் என்றும் நம்பிக்கை வைத்தல்.





1. ஒரு நாளைக்கு நிறைவேற்ற வேண்டிய சலாத்.(தொழுகை)





3. வருடத்தில் ரமதான் மாதம் நோன்பு நோற்றல்





4. ஏழைகளுக்கு கொடுக்க வேண்டிய சகாத் வரி.





5. உடல் வலிமையும் பண வசதியும் உள்ள மனிதர்கள் மக்காவுக்கு ஹஜ் யாத்திரை செய்தல்.





ஒரு கட்டிடத்தின் எல்லா தூண்களும் உயரத்திலும், பலத்திலும் ஒரே அளவில் இருந்தால் தான், கட்டிடத்துக்கு தேவையான உருவமும், அமைப்பும் சரியாக ஏற்படும். ஒருவர் ஹஜ்ஜை மாத்திரம் நிறைவேற்றி கட்டாய தொழுகை, நோன்புகளை கைவிட முடியாது. தூன்கள் மாத்திரம் நிற்கும் ஒரு கட்டிடத்தை கற்பனை செய்து பாருங்கள். அதனை கட்டிடம் என எவரும் அழைக்கமாட்டார்கள். அது கட்டிடமாவதற்கு அதற்கு ஒரு கூரை தேவை. அதற்கு சுவர்கள், கதவுகள், ஜன்னல்கள் தேவைப்படு கின்றன. அதே போன்று, இஸ்லாத்திலும் நேர்மை, உண்மை, உறுதி போன்ற அனேக நற்பன்புகள் உள்ளன. அதனால் ஒரு முஸ்லிமாவதற்கு இஸ்லாத்தின் ஐந்து தூண்களை பின்பற்றுவ துடன், மனிதனுக்குரிய உயர்ந்த நற்பண்புகளும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மாத்திரமே கட்டிடம் முழுமை அடைந்து அழகாகத் தோன்றும்.





18.இஸ்லாத்தில் வணக்கத்தின் நோக்கம் என்ன?





இஸ்லாத்தில் வணக்கத்தின் நோக்கம் இறையச்சத் தோடு வாழ்வதற்கே. இதன் காரணமாக, வணக்கம் எனப்படும் தொழுகை, நோன்பு, சகாத் எனும் ஏழை வரி போன்ற அனைத்தும் இறையச்சம் எனப்படும் நிலையை அடைவதன் நோக்கத்திலேயே நடைபெறுகின்றன. ஆகையால் ஒருவர் இறையச்சம் என்னும் நிலையை அடையும் போது, இவ்வுலக வாழ்வில் சிந்தனையிலும், செயலிலும் உயர்ந்த நிலையை பெற்று இவ்வுலகிலும், மறு உலகிலும் பெரும் நன்மைகளை தேடிக் கொள்ளும் வாய்ப்பை பெற்றுக் கொள்வார்.





19.மரணத்தின் பின் வாழ்வை முஸ்லிம்கள் நம்புகிறார்களா?





அல்லாஹ் மிகவும் நீதமானவன், அதோ போல் தன் நீதத்தை தெளிவாக காட்டுகிறான். ஒவ்வொருவரும் தமது செயல்களுக்கு பொறுப்பெடுக்க வேண்டிய முறையை அவன் அமைத்துள்ளான். நற் காரியங்களை செய்பவர்களுக்கு அவற்றுக்குரிய வெகுமதி உண்டு. அது போன்றே பிழை செய்பவர்களுக்கு அவற்றுக்குரிய தண்டனையும் உண்டு. அதன்படி சுவர்க்கத்தையும், நரகத்தையும் அவனே படைத்தான். அவற்றுக்குள் அனுமதிக்கப் படுவதற்கு நிபந்தனைகள் உள்ளன. இவ்வுலக வாழ்வு தற்காலிகமானது என முஸ்லிம்கள் விசுவாசிக்கிறார்கள். இவ்வுலக வாழ்க்கை ஒரு பரீட்சையாகும், இதில் நாம் வெற்றி பெற்றால் சுவர்க்கத்தில், உத்தமர்களின் மத்தியில் என்றென்றும் நிரந்தரமாக வாழக் கூடிய பாக்கியம் எமக்கு கிடைக்கும்.





20.இறை நம்பிக்கை இல்லாதவர்களின் நற்செயல்கள் வீனாகிப் போகின்றனவா?





இல்லை. “எனவே எவர் ஓர் அணுவளவு நன்மை செய்தாரோ அவர் (மறுமையில்) அதன் பயனை கண்டு கொள்வார். மேலும், எவர் ஒரு அணுவளவு தீமையை செய்தாரோ அவர் (மறுமையில்) அத(ன் பய)னை கண்டு கொள்வார்." (குர்ஆன் 99; 7,8 வசனங்கள்.)





இறை நம்பிக்கை இல்லாத மக்களும் நற்காரியங் களை செய்தால் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் நற்காரியங்களுக்கு உரிய வெகுமதியை பெற்றுக் கொள்வார்கள் என்பது இதன் பொருளாகும். அதே நேரத்தில் நற்கருமங்கள் செய்தவர்கள் முஸ்லிமாக இருந்தால், அவர்களுக்கு இவ்வுலகில் வெகுமதி கிடைப்பது மாத்திரமன்றி, மறு உலகிலும் வெகுமதி கொடுக்கப் பெறுவார்கள். எப்படியாயினும், இறுதித் தீர்ப்பு அல்லாஹ்வுக்கே உரியது. (குர்ஆன் 2; 62.)





21.முஸ்லிக்களின் உடை சம்பந்தப்பட்ட நியதி என்ன?





எல்லா சந்தர்ப்பங்களிலும் கண்ணியத்தை கடைபிடிக்கும் படி இஸ்லாம் அழுத்தமாக கூறுகிறது. எவரும் காம இச்சையின் சின்னமாகக் கருதப்படக் கூடாது. உடலுருப்புகளை தெளிவாக எடுத்துக் காட்டும் முறையில் அவர்களுடைய ஆடைகள் மிகவும் மெல்லியதாகவோ, மிகவும் இறுக்கமானதாகவோ இருக்க கூடாது என ஆண்கள், பெண்கள் இரு பாலாருக்கும் பொதுவான வழிமுறைகள் உண்டு. ஆண்கள் குறைந்த பட்சம் தமது முழங்கால் முதல் கொப்புழ் வரை மறைக்க வேண்டும். பெண்கள் தமது முகம், கைகள் தவிர உடம்பின் ஏனைய பகுதிகளை மறைக்க வேண்டும் என்பது இஸ்லாமிய நியதியாகும்.





22.முஸ்லிம்களின் உணவு பற்றிய தடைகள் என்ன?





பன்றி இரைச்சி, பன்றியை மூலப்பொருளாகக் கொண்ட உணவுகள், அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுப்பதற்கு முன்பே இறந்துபோன பிராணிகள், ஏனைய பிராணிகளின் மாமிசத்தை உண்ணும் விலங்குகள், (அவை இறந்த பிராணி களின் மாமிசத்தை உண்பதால்), இரத்தம் அல்லது மது பானம் குடிப்பது, போதையூட்டும் பொருட்கள் உபயோகிப் பது போன்றவை முஸ்லிம்களுக்கு தடை செய்யப் பட்டுவை என குர்ஆன் அறிவிக்கிறது.





23. ஜிஹாத் என்றால் என்ன?





ஜிஹாத் என்ற வார்த்தை கஷ்டப்பட்டு முயற்சி செய்தல், விஷேடமாக அல்லாஹ்வின் பாதையில் கஷ்டப்பட்டு முயற்சி செய்தல் என்று பொருள் படும். அன்றாட வாழ்க்கையில் ஒருவர் செய்யும் எந்த முயற்சியும் ஜிகாத் என்று கருதப்படும். இவற்றுள் ஒரு கொடுங்கோல் அரசனை எதிர்த்து நின்று, சத்தியத்தை பேசுவது ஜிஹாதின் உயர்ந்த நிலையை குறிக்கும். பிழை செய்வதை விட்டும் தன்னை தடுத்துக் கொள்வது பெரும் ஜிஹாதாகும். இஸ்லாத்துக்கு எதிராக அல்லது ஒரு முஸ்லிம் தேசத்துக்கு எதிராக தாக்குதல் நடத்தும் போது, அதனை பாதுகாக்க ஆயுதம் தாங்குவது ஜிஹாத் ஆகும். இந்த வகையான ஜிஹாத் குர்ஆனையும், சுன்னாஹ்வையும் கடைபிடிக்கும் மார்க்கத் தலைவரால் அல்லது முஸ்லிம் தேசத் தலைவரால் பிரகடணம் செய்யப்பட வேண்டும்.





24.இஸ்லாமிய வருடம் என்பது என்ன?





கி.பி. 622ம் வருடம் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மக்கா நகரை விட்டு நீங்கி மதீனாவுக்கு இடம் பெயர்ந்து சென்றடைந்த போது ஹிஜ்ரி வருடம் ஆரம்பமானது. சந்திரனை அடிப்படையாகக் கொண்ட ஹிஜ்ரி வருடத்தில் 354 நாட்கள் உள்ளன. இதில் முதலாவது மாதம் முஹர்ரம் ஆகும். கி.பி.1996 என்பது ஹிஜ்ரி 1416ம் வருடமாகும்.





25.இஸ்லாத்தின் முக்கிய பெருநாட்கள் என்ன?





ஈத் அல் பித்ர் என்பது ரமதான் மாத நோன்பு முடிவில் கொண்டா டப்படும் பெருநாளாகும். அந்தாளில் மக்கள் அனைவரும் பொது இடத்தில் தொழுது, விஷேட உணவுகள் தயாரித்து, ஒருவருக் கொருவர் பரிசில்கள் பரிமாரிக்கொள்வர்.





ஈத் அல் அழ்ஹா என்பது மக்காவுக்கு மேற் கொண்ட புனித ஹஜ் யாத்திரையை முடிக்கும் சந்தர்ப்பத்தை கொண்டாடும் பெரு நாளாகும். அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றும் பொருட்டு தன் மகனாகிய இஸ்மாயில் நபியை அறுத்து தியாகம் செய்ய முன் வந்த இப்ராஹிம் நபியின் தியாகத்தின் முக்கியத்தை நினைவு படுத்திக் கூட்டுத் தொழுகையை முடித்த பின், வசதி படைத்த மக்கள் ஒரு ஆட்டை உணவுக்காக அறுப்பார்கள்.





26.ஷரீஆ என்பது என்ன?





குர்ஆன், முஹம்மத் நபியின் சுன்னாஹ் ஆகிய இரண்டின் அடிப் படையில் பெறப்பட்ட முழுமையான முஸ்லிம் சட்டம் ஷரீஆ என அழைக்கப்படும். ஷரீஆ எனும் இஸ்லாமிய சட்டம் மனிதனின் தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தை யும் அடக்கியுள்ளது. தனிப்பட்ட மனிதருக்கு வாழ்வதற்கும், சொத்து சம்பாதிப்பதற்கும், அரசியலில் ஈடுபடுதல், தான் விரும்பிய மார்க்கத்தை பின்பற்றுதல் போன்ற அடிப்படை உரிமைகளில் சுதந்திரமும், பெண்கள் மற்றும் சிறு பான்மை யரின் உரிமைகள் ஆகியவற்றின் பாதுகாப்பு போன்ற அனைத்தும் ஷரீஆ சட்டத்தில் அடங்கியுள்ளன. முஸ்லிம் சமூகங்களில் மிகக் குறைந்தளவில் நடைபெறும் குற்றங்களுக்கு காரணம் அங்கு அமுல் நடத்தப்படும் இஸ்லாமிய சட்டங்களே.





27.இஸ்லாம் வாள் முனையில் பரப்பப் பட்டதா?





“மார்க்கத்தில் எத்தகைய நிர்ப்பந்தமும் இல்லை" என்று குர்ஆன் 2;256 வது வசனம் அறிவிக்கிறது. அதனால் யாரையும் முஸ்லி மாக மதமாற்றம் செய்ய எவருக்கும் அதிகாரமில்லை. அனேக மக்களையும், நாடுகளையும் விடுதலை பெற்றுக் கொடுப்பதற்கு முஸ்லிம் படைகள் சென்றதும், அவர்கள் அந்த காலத்திய ஆயுதமாகிய வாள்களை ஏந்தி சென்றார்கள் என்பதும் உண்மை. எனினும், இஸ்லாம் வாள்முனையில் பரப்பப்படவில்லை என்பது தான் உண்மையாகும். காரணம், இன்று பெரும் பான்மையாக முஸ்லிம்கள் வாழும் தூர கிழக்கு நாடுகளான சீனா, இந்துனேஷியா, மற்றும் அனேக ஆபிரிக்க நாடுகளுக்கு எந்த முஸ்லிம் படையும் சென்றதாக சரித்திரத்தில் ஒரு ஆதாரமும் இல்லை. இஸ்லாம் வாள் முனையில் பரவியது என்ற கூற்று, துப்பாக்கிகள், ஜெட் விமானங்கள், அணு குண்டுகள் மூலம் கிறிஸ்தவ மதம் பரவியது எனக் கூறுவதைப் போலாகும். இது உண்மையல்ல. கிறிஸ்துவ மிஷனரி எனப் படும் போதகர்கள் மூலம் கிறிஸ்துவ மதம் பரவியது. அரபு இனத்தவர்களில் 10% கிறிஸ்தவர்கள். “இஸ்லாத்தின் வாள்" மூலம் முஸ்லிம் நாடுகளில் வாழும் முஸ்லிம் அல்லாத சிறு பான்மை மக்கள் அனைவரையும் முஸ்லிமாக மாற்றவில்லை என்பதும் உண்மை. 700 வருடங்கள் முஸ்லிம் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில் முஸ்லிம்கள் இன்றும் சிறு பான்மையாகவே வாழ்கின்றனர். மிகவும் வேகமாக இஸ்லாம் பரவும் வட அமெரிகாவில் இன்று 6 மிலியன் முஸ்லிம் மக்கள் வாழ்கிறார்கள். அங்கும் “இஸ்லாத்தின் வாள்" என்பதை காண முடியாது.





 





 





 



Recent Posts

சமாதானத்தை வாதிடும் க ...

சமாதானத்தை வாதிடும் குழப்பவாதிகள்

பராஅத் இரவு என்ற பெயர ...

பராஅத் இரவு என்ற பெயரில்

நரக தண்டனை தேவ நீதியா ...

நரக தண்டனை தேவ நீதியா? கிறிஸ்தவர்களுக்கான பதில்

பெண்ணின் கன்னித் தன்ம ...

பெண்ணின் கன்னித் தன்மையை நிரூபிக்க அக்கினிப் பரீட்சை